Skip to content
Home » சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இரவு பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி அடாவடியில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி அடாவடித்தனம் செய்த பாஜக விருந்தோம்பல் பிரிவு நாகை மாவட்ட தலைவர் புவனேஷ்வர்ராம் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து கீழையூர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து பாஜக பிரமுகர் புவனேஷ்வர்ராம் வருகின்ற 9 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மத நல்லிணக்க மாவட்டமான நாகை மாவட்டத்தில் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் இதுபோன்ற பாஜக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொன்ன சிறையில் இருக்கும் பாஜக நிர்வாகியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் தளபதி அறிவழகன் தலைமையில் நாகை எஸ்பி ஹர்ஷ்சிங்கை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதில் நாகை சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சுரேஷ்,நாகை நகர செயலாளர் முத்துவளவன்,இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் மஞ்சைஹாஜா,திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன்,சமூக ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் வைரமுத்து,திருமருகல் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அரவிந்தவளவன் மற்றும் விஜயராகவன், சர்புதீன்,ஐயவநல்லூர்கவி, கண்ணன்,கவியரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!