அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மாநிலங்களவை எம்.பி கிரிராஜன் மனுத்தாக்கல். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி,
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், காமராஜ், உள்ளிட்டோர் மீதும், தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா நாராயணன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

