Skip to content
Home » சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட ரூ.38 கோடி.. நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல்..

சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட ரூ.38 கோடி.. நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல்..

டில்லி என்சிஆர் பகுதியில் ‘நியூஸ்கிளிக்’ என்ற இணைய ஊடக செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த செய்தி நிறுவனமானது சீனாவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் பணப்பரிமாற்ற விவகாரங்களை அமலாக்கத்துறை கண்காணித்து வந்தது. அதில் சீன நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் மேற்கண்ட நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.

அதையடுத்து டில்லி-என்சிஆர் பகுதியில் வசிக்கும் இணைய செய்தி நிறுவன அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்களின் வீடுகளில் இன்று டில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது.  சோதனை நடத்திய போலீஸ் சிலரை கைது செய்த நிலையில் நியூஸ்கிளிக் செய்தி இணையதள அலுவலகத்துக்கு டில்லி போலீஸ் சீல் வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!