Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ,திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை ,கடலூர் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சிராப்பள்ளி ,அரியலூர் ,பெரம்பலூர் ,தேனி ,திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம், திருப்பூர் ,கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!