சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். வி.ஐ.பி. பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளில் சேமிக்கும் திட்டம் ஆமைவேகத்தில் நடக்கிறது. இக்கட்டான சூழலில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் நாம் உதவிகரமாக இருக்க வேண்டும். காவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 1.30 லட்சம் காவலர் பணியிடஙளில் 1.18 லட்சம் பேர்தான் பணியில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
