வடகொரியா ஒரு அணு ஆயுத வல்லரசு நாடு என்றும், இனி இந்த நிலையை யார் நினைத்தாலும் ஒருபோதும் மாற்ற முடியாது என்றும் அந்நாட்டு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்தை கண்டித்து ஐ.நா அணுசக்தி முகமை (IAEA) சமீபத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அந்நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளை கண்டுகொள்ளாத ஐ.நா, வடகொரியா மீது மட்டும் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
