ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே திருச்சி, மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வண்டி எண் 06110 புதன்கிழமைகளிலும் (ஆகஸ்ட் 12, 19, 26, செப்.2), மறுமார்க்கத்தில் வண்டி எண் 06109 வியாழக்கிழமைகளிலும் (ஆகஸ்ட் 13, 20, 27, செப்.3) இரு நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் செங்கோட்டை, தென்காசி, சிவகாசி, திண்டுக்கல், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
