Skip to content
Home » ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Senthil

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷின் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்த வகையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை உருவாகி உள்ளது.   இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை பரிமாறி கொண்டாடினர்.

இந்தநிலையில்  வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் இன்று நமது மாவட்ட கழக அலுவலகத்தில்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, பகுதி கழக செயலாளர்

A.தண்டபாணி, M.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் T.M. முருகன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் K.S.பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், மற்றும் மாமன்ற உறுப்பினர் கோ.கு.அம்பிகாபதி, மற்றும் கழக முன்னோடிகள் ஜே.பாலமூர்த்தி, லால்குடி Ex.ஒன்றியம் குணசீலன், P.கணபதி, வட்ட கழக செயலாளர்கள் தெய்வமணிகண்டன், K.P.சங்கர், ஆபிரகாம், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்று கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!