Skip to content

சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

சிறுமி குளிப்பதை எட்டிப் பார்த்த பெயிண்டர் கைது

திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 34) பெயிண்டர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டு குளியல் அறையில் குளிக்கும் போது எட்டிப் பார்த்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதார்.
தாயார் உடனடியாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீராபாய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போஸ்கோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

டூவீலர் திருடிய ரவுடி கைது..

திருச்சி ஏர்போர்ட் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 26)இவர் வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு இரவு படுத்து தூங்கினார். பின்னர் மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம ஆசாமிகள் இரவு திருடி சென்று விட்டனர் இதுகுறித்து முகமது இஸ்மாயில் ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சிவா என்கிற சிவனேசன் (வயது 29) என்பவரை கைது செய்தனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

திருச்சி ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகசாமி இவரது மகன் சுரேஷ் (வயது 52) இவர் தனது மோட்டார் சைக்கிளில்
வெஸ்ட்ரி பள்ளி அருகே சென்றபோது தவறி கீழே விழுந்தார் இதில் அவரது தலை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வெளி காயம் தெரியாததால் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் நேராக வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர்
அவருக்கு தீராத தலைவலி ஏற்பட்டது பின்னர் பத்து நாட்கள் கழித்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சுரேஷ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது தந்தை நாகசாமி கொடுத்த புகார் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

4 கிலோ கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

திருச்சி மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு திருச்சி திண்டுக்கல் ரோடு கோரையாறு வாய்க்கால் கரையோரம் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது உடனடியாக சப் இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர் பின்னர் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த திருச்சி ராம்ஜி நகர் மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவரை கைது செய்தனர் மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ 120 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர் இதன் மதிப்பு ரூ. 41 ஆயிரம் ஆகும்.

 

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் ரயில்வே தண்டவாளம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர் பின்னர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனையிட்டபோது அவர் போதை மாத்திரை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது பின்னர் 10 போதை மாத்திரைகளை கைப்பற்றி அவரை கைது செய்து விசாரணை செய்தபோது திருச்சி தென்னூர் புற்று மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த தந்துரு என்கிற தாரணி (வயது) 21 என்பது தெரிய வந்தது.

error: Content is protected !!