குஜராத் மாநிலம் பனோலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் கதவு அருகில் அமர்ந்திருந்த அசோக் (32) என்பவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் திடீரென பறித்துள்ளார். செல்போனை பறித்த வேகத்தில் நிலைகுலைந்து தடுமாறிய அசோக், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து ரயிலின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
