Skip to content
Home » பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

  • by Senthil

பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) பீகார் செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!