Skip to content
Home » பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை காவலர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே முன்னின்று தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தூய்மைக் காவலர்கள், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள், நேரு யுகேந்திராவில் உள்ள தன்னார்வை இளைஞர்கள் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

மேலும், அந்தந்த அரசு அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாம் வாழும் பகுதியையும், பணிசெய்யும் இடத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும். உறுதிமொழி எடுப்பதோடு விட்டுவிடாமல் அந்த உறுதி மொழியை நடைமுறைப் படுத்துவதற்கு அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தூய்மைப் பணி என்பது சிறப்பு நிகழ்வாக நிகழ்ச்சிகள் வைத்து நடத்துவதோடு அல்லாமல் தினந்தோறும் நம்மை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. கிராமப்புறங்களில் நீர் நிலைகள் , பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரித்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் ராமர், மகளிர் திட்ட இயக்குனர் அருணாச்சலம், மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபால கங்காதரன், தூய்மையே சேவை இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சிவா, நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!