பெரம்பலூர் மாவட்டம், வயலப்படியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் திமுகவில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், கவுன்சிலர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளில் வலம் வந்த வெங்கடாச்சலம் நேற்று திமுகவில் இருந்து விலகி அதிமுக வின் முக்கிய பிரமுகருடன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து இன்று வெங்கடாச்சலம் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை. தமிழ்செல்வனை சந்தித்து
70 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட அளவில் திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.