ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டீலர்கள் 400 டன் சர்க்கரை மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 400 டன்களுக்கு மேல் உபரியாக இருக்கும் சர்க்கரையை டீலர்கள் சந்தையில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. சர்க்கரையை கொள்முதல் செய்த 30 நாட்களில் விற்பனை செய்திட வேண்டும். சர்க்கரை மீதான கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
