Skip to content
Home » பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமானூர் கிழக்கு பாமக ஒன்றிய செயலாளராகஇருக்கிறார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு, தனது  மனைவி சாந்தி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த ரம்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து 2ம் திருமணம் செய்து கொண்டதாக,
முதல் மனைவி சாந்தி பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த  அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்வம், குற்றவாளி மணிகண்டனுக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!