Skip to content
Home » போலீஸ் தான் என் மகனை ரவுடியாக்கியது…. என்கவுன்டர் செய்யப்பட்ட கொம்பனின் தாயார் கண்ணீர்

போலீஸ் தான் என் மகனை ரவுடியாக்கியது…. என்கவுன்டர் செய்யப்பட்ட கொம்பனின் தாயார் கண்ணீர்

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(31). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்  இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம்  சமயபுரம் அருகே சனமங்கலம்  காட்டுப்பகுதியில்  கொம்பன் என்கிற ஜெகன் வயது(31)  போலீசார் என்கவுன்டர் செய்து கொன்றனர்.  உடனடியாக அவரது உடல் லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர்  இரவு 9 மணி அளவில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு  கொண்டு வரப்பட்டது.

மகன் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து  கொம்பன் ஜெகனின் தாயார் சரஸ்வதி  கூறியதாவது:

எனது மகன் எந்த தவறும் இனி செய்ய மாட்டேன் என கூறி காவல்துறையினருக்கு கையெழுத்து போட்டு கொடுத்திருந்தான்.  எனது மகன் மீது உள்ள வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களில் சரியாக ஆஜராகி வந்தான். இருப்பினும் காவல்துறையினர் அடிக்கடி வந்து தொந்தரவு செய்தனர். எனது மகனை ரவுடியாக்கியது காவல்துறையினர் தான். காவல்துறையினருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டுதான் இருந்தான்.

அப்பொழுதே  போலீசார் ஜெகனை கண்டித்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. எனது மகனை நம்பி நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம். எனது மகன் தவறே செய்து இருந்தாலும் அவனுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என்கவுன்டர் செய்யும் அளவிற்கு எனது மகன் ஏதும் செய்யவில்லை, என பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!