திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜா என்பவரை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யச் சென்ற போது, ராஜா, தனிப்படை சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத்தை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். உடனே போலீசார் தற்காப்புக்காக ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தொடர்ந்து அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த சார்பு ஆய்வாளரும் சிகிச்சை பெற்று வருகிறார்.
