Skip to content
Home » ஜனாதிபதி முர்மு 3 மாநிலங்களில் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி முர்மு 3 மாநிலங்களில் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடகா, தெலுங்கானா உள்பட 3 மாநிலங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 7-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று  கர்நாடகா செல்லும் அவர், முட்டனஹள்ளி சத்யசாய் பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மாநில கவர்னர் மாளிகையில் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பழங்குடியின பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) தெலுங்கானா செல்லும் அவர், ஐதராபாத்தில் நடைபெறும் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழாவில் உரையாற்றுகிறார்.

5ம் தேதி மராட்டியத்தின் கட்சிரோலியில் உள்ள கொண்ட்வானா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  பங்கேற்கும் ஜனாதிபதி, 7-ந்தேதி வரை  மராட்டியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த தகவல்கள் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!