Skip to content
Home » பத்தோடு பதினொன்றாக பார்க்கனும்.. பிரதமர் வருகை…. செல்லூர்ராஜூ கலாய்ப்பு…

பத்தோடு பதினொன்றாக பார்க்கனும்.. பிரதமர் வருகை…. செல்லூர்ராஜூ கலாய்ப்பு…

  • by Senthil

மதுரை விளாங்குடியில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பணிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு இன்று அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறும்போது… “மதுரை மேற்கு தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் பென்னிகுயிக் தங்கி இருந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, அதிமுக ஆட்சி காலத்தில் பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம் கட்டப்பட்டது, பென்னிகுயிக்கிற்காக எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தாத திமுக அரசை தேனி மாவட்ட மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசு மக்களவைத் தேர்தலை வேண்டுமென்றே தள்ளி வைத்துக்கொண்டு செல்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக மக்களவைத் தேர்தல் தேதி தள்ளி கொண்டே செல்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டும். தேர்தலுக்காக பிரதமர் மோடி மேடைகளில் பேசி வருகிறார். மேடைகளில் அவ்வப்போது எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து புகழ்ந்து பேசுகிறார். மோடி முதலில் அண்ணாமலையிடம் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பேச வேண்டும். மோடியின் பேச்சுக்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என ஒற்றுமையாக இருக்கக்கூடிய தமிழகத்தில் பாரதிய ஜனதாவால் தடம் பதிக்க முடியாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!