புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார் பெறவில்லை என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கேட்டு, சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்த மகளிர் காங்கிரஸார் முடிவு எடுத்தனர்.
தகவலறிந்த பெரியகடை போலீஸார் பெண் காவலர்களுடன் அங்கு குவிந்தனர். மகளிர் காங்கிரஸார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் அவர்களை அங்கிருந்து போலீஸ் வேனில் ஏற்றினர். முக்கிய நிர்வாகிகள் 10 பேரை மட்டும் முதல்வரை சந்திக்க போலீஸார் அனுமதித்தனர்.அவர்கள் முதல்வரை சந்திக்க சென்றனர்.
