Skip to content
Home » புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா..

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா..

  • by Senthil

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 21 முஸ்லீம் மகளிருக்கு தலா 5700 வீதம் ரூ.1,19,700 மதிப்பிலான விலையில்லா தையல் மிஷினை கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கினார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட பிற்படுத்தபட்டோர்

மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.  மேலும் 25 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் கலெக்டர் மெர்சி ரம்யா. மேலும் மக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!