Skip to content
Home » நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

பொதுமக்கள், மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசையும்,ஆளுநரையும் கண்டித்து  வரும்  20ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  திமுக மாணவரணி, இளைஞரணி,  மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த  திமுக அணி நிர்வாகிகள்   ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

புதுக்கோட்டையில்  20ம் தேதி திலகர் திடலில்   உண்ணாவிரதம் நடக்கிறது. இதனை  வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்  மாவட்ட தி.மு.க.அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரும்,தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,மாநிலவிவசாய அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன்,நகரச்செயலாளர் ஆ.செந்தில்,இளைஞர் அணி செயலாளர் சண்முகம்,மருத்துவரணிஅமைப்பாளர் மு.க.முத்துக்கருப்பன், வடக்கு மாவட்ட பொருளாளர் எம்.லியாகத்அலி,மதியழகன்,சுப.சரவணன்,மு.க.ராமகிருஷ்ணன்
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  உண்ணாவிரதத்தில் பல்லாயிரகணக்கான  திமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன், பொதுமக்களையும், மாணவர்களையும் பங்கேற்க  அழைப்பு விடுப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!