Skip to content
Home » திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்படாமல் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க எஸ்.பி. வந்திதா பாண்டே, சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி காவல் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் மணமேல்குடி காவல்  நிலைய குற்ற எண் 556/2020 u /s 382 IPC வழக்கில் சுமார் 4 1/2 பவுன் தங்க சங்கிலியையும் மற்றும்  குற்ற எண் 41/2023 u/s 379 IPC வழக்கில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள ஆட்டோவினையும் திருடி சென்ற குற்றவாளிகளை கைது செய்து திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.  பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள்  புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டேவுக்கு நன்றி தெரிவித்தனர்.  தீவிரமாக துப்பு துலக்கி, திருட்டு போன உடமைகளை மீட்ட   கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர்  கெளதம் தலைமையிலான   மணமேல்குடி காவல் நிலைய  ஆய்வாளர் குணசேகரன் , மற்றும் மணமேல்குடி  போலீஸ்காரர்கள்  பிரபாகரன், மாரிமுத்து, கணபதி   ஆகியோரை   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே   பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.   தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய ஊக்கப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!