Skip to content
Home » புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதிஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்பக விநாயகர் மஹாலில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் மகளிர்

சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணை தலைவர் த.சந்திரசேகரன், நகர்மன்றத் தலைவி திலகவதி செந்தில், நகர்மன்றதுணைத்தலைவர் எம்.லியாகத்அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!