Skip to content
Home » ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்  இந்திய எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையில், ராமேஸ்வரம் மீனவர்கள்  6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.. மேலும் அவர்களது  2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல்  செய்து கொண்டு சென்றனர்.. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்குஅழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும்,  முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் 6 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இலங்கை கடற்படையினர்  தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்யும் அட்டகாசம் தொடா்ந்து நடந்து வந்தாலும் , அதை மத்திய அரசு கண்டிக்காமல் இருப்பதை கண்டு தமிழக மீனவர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!