Skip to content
Home » ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அவர்களை காங்கேசன் துறைமுகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!