சட்டீஸ்கரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 24 வயது இளைஞருக்கு துர்க் போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மோகன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி 6 வயது மற்றும் 3 மாத குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
