Skip to content
Home » மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

  • by Senthil

வங்க கடலில்  உருவாகி உள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  3ம் தேதி புயலாக மாறுகிறது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த   காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தற்போது  சென்னைக்கு  700 கி.மீ. தொலைவில்   உள்ளது . இது 4ம் தேதி  மாலை சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

இதன் காரணமாக வரும் 3, 4ம் தேதிகளில் தமிழகத்தின் வட கடலோர  மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  அத்துடன்  4ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் மின கனத்த மழை பெய்யும் என்றும்  இதனால் 4ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலா்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!