சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளத் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துச் உரையாடினார். இச்சந்திப்பின் போது முதலமைச்சருக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கிராமப்புற வங்கிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) கடன் உதவிகளை எளிதாக்குவது மற்றும் மாநில அரசின் புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கான வங்கியியல் ஆதரவு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் மாநில அரசு உயர் அதிகாரிகளும் ரிசர்வ் வங்கியின் மண்டல அதிகாரிகளும் உடனிருந்தனர்.
