கேரள மாநிலம் மலூர் பகுதியில், ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியதால் வைக்கப்பட்டிருந்த பொறியில் அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று சிக்கியது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தியபோது, அது பொறியில் இருந்து தப்பிக்க முயன்று காயமடைந்து உயிரிழந்தது.
