ஆந்திர மாநிலம், கடப்பா (ஒய்.எஸ்.ஆர்) மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2022ம் ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவில் பதிவான முதல் கொரோனா மரணங்கள். கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆந்திர அரசு சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், தனி படுக்கை வசதிகளை தயார்படுத்தவும் அறிவுறுத்தல்.
கொரோனா நோயாளிகளுக்காக தனி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது.
