திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை ரூ.1,41,50,503 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து ரூ,1,37,78,383 பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
