Skip to content

வருடம் ரூ.15 ஆயிரம்: ‘தாய்க்கு வணக்கம்’ திட்டம் – ஆந்திராவில் தொடக்கம்

  • by Authour
தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு  மாநிலங்களும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திர அரசு,  படிக்கிற குழந்தைகளுக்கு , அவர்களது தாயாரின்  வங்கி கணக்கில்  வருடம் 15 ஆயிரம் வழங்கும்  திட்டத்தை  ஆந்திராவில்  இன்று  தொடங்குகிறார்கள். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின்  தாயாரின்  வங்கிக் கணக்குகளில் ரூ.15,000 கல்வி உதவித்தொகை செலுத்தும் நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.
ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட  நிலையில், ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் அறிவித்த மற்றொரு வாக்குறுதி இன்றுஅமலுக்கு வந்தது.
ஆந்திர அரசு ‘தல்லிக்கு வந்தனம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. இதன்படி, 1-ம் வகுப்பு  முதல்   12-ம் வகுப்பு வரை  பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டம் மூலம் 67,27,164 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மட்டும், அவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த பள்ளிகளின் பதிவேட்டு பட்டியலின் அடிப்படையில் அவர்களின் தாயாருக்கு ரூ.15,000 பின்னர் வழங்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.  இந்த திட்டத்தில் சில நிபந்தனைகளை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, வீட்டில் எத்தனை பேர் படித்தாலும் அனைவருக்கும் தலா ரூ.15,000 வீதம் வழங்கப்படும். ஆனால் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படித்தல் அவசியம். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் பயனளிக்கும்.
பள்ளிகளில் 75 சதவீதம் வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு மாணவ, மாணவிகளின் கல்விச் சான்றிதழ், ஆதார், தாய்மார்களின் வங்கிக் கணக்கு விவரம், தாயின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ், தேவைப்பட்டால் வருமானச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!