Skip to content
Home » விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கடந்த 21ம்தேதி இரவு 11மணியளவில்இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் எதிர்பாரவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தார் .சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் நிலைய காவல்துறையினர் மகேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் விபத்து நடத்த இடத்தில் மகேஸ்வரன் வந்த இருசக்கர வாகனத்தில் ரூ 4லட்சம் பணம் இருந்ததைபார்த்த காவலர் மகராஜ் பணத்திற்கு ஆசைப்படாமல் அவரது உயர் அதிகாரிகளிடம் தகவல்தெரிவித்தார். இன்று  அந்த காவலர் மகராஜை அழைத்து பாரட்டிய டிஐஜி சரவணசுந்தர், டி.எஸ்.பி ராகவி , எஸ் ஐ சரவணன் முன்னிலையில் காயமடைந்த மகேஸ்வரன் மனைவி ரத்தினாவதியிடம்  ரூ.4 லட்சத்தை ஒப்படைத்தார். காவலரின் இந்த செயல் நகர காவல் நிலையத்திற்கு பெருமை சேர்த்ததுடன் காவல்துறையின் மதிப்பை உயரச்செய்துள்ளது என்று டிஐஜி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!