Skip to content
Home » சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

தமிழகத்தில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச திருமண திட்டத்தின் கீழ் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய மக்கள் திருமண திட்டத்தின் கீழ் 10 ஜோடிகளுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  இன்று,  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் திருமணம்  நடைபெற்றது. அமைச்சர் நேரு மணமக்களுக்கு மாலை, மற்றும்  தாலியை எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு இந்து சமய அறநிலைய துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் திருக்கோவில்கள் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமண விழாக்கள் திருக்கோயில்களில் நடத்தப்படும் எனவும் மணமக்களுக்கு அரசு சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி  இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றது.  திருமணம் மேற்கொள்வோரிடமிருந்து  ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 10 ஜோடிகளுக்கு பட்டுச்சேலை, பட்டு வேட்டி,

கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி சமயபுரம் மாரியம்மன் அருளுடன் கோவில் மண்டபத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவுக்கு  கோவில் இணை ஆணையர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், சட்டமன்ற உறுப்பினர்கள் திருச்சி மாநகர மேயர் அன்பழகன், துணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர்கள்  கலந்து கொண்டனர். தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் திருமணம் நடப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நேரு, சேகர்பாபு ஆகியோருக்கு  நன்றி தெரிவிப்பதாகவும் மணமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!