சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.
சிவில் இன்ஜினியரான ராஜேஷ்குமார், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணியாற்றி வந்தார்.
மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த ராஜேஷ்குமார் சொந்த ஊர் திரும்பும் போது, அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
4 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.