Skip to content
Home » பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. உயிர்தப்பிய ஆசிரியர்கள்-மாணவர்கள்..

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. உயிர்தப்பிய ஆசிரியர்கள்-மாணவர்கள்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இன்று காலை மருதம்பள்ளம் கிடங்கள் சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேன் வந்துள்ளது. அப்போது அதிவேகமாக வந்த வேன் கிடங்கல் அருகே நத்தம் பகுதியில் வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று வேனில் சிக்கி படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆக்கூர் அரசு ஆஸ்பத்திரி

மற்றும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். வாய்க்காலில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் பள்ளி மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். முதலுதவி சிகிச்சை பெற்று மாணவர்கள் வீடு திரும்பினர். இரண்டு ஆசிரியர்கள் காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன ர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொறையார் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!