Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்விரோதம் – கஞ்சா போதையில் வாலிபர் அடித்துக் கொலை-பரபரப்பு

திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக ரஞ்சித் (26) என்ற இளைஞர், கஞ்சா போதை கும்பலால் கருங்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருவண்ணாமலை பகுதியில் வசித்து வந்த வாலிபர் ரஞ்சித்துக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த பகைமையின் தொடர்ச்சியாக, ரஞ்சித்தை பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கும்பல், தீவிரமாக திட்டம் தீட்டி வந்துள்ளது.

சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், ரஞ்சித்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கண்மூடித்தனமாக பாய்ந்த அந்த கும்பல், அருகில் இருந்த கனமான கருங்கல்லை எடுத்து ரஞ்சித்தின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவண்ணாமலை போலீசார், தீவிர விசாரணை நடத்தி மோகன் மற்றும் சந்துரு ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த கொடூர கொலையில் தொடர்புடைய, தப்பியோடிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!