தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து(45) என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றொரு போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். மேற்சொன்ன 2 பேர் மீதும் போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு தாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளின் பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரையும் நேற்று முன்தினம் தாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

