திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் 10 நாட்களில் 9 வீடுகளில் கொள்ளையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுகனூர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளை வைத்தும், மோப்பநாய் வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
