Skip to content
Home » இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிடேந்திர நாத் சர்மா (வயது 40) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பி.ஆர். சிங் (வயது 52) சப்-இன்ஸ்பெட்கராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை இன்ஸ்பெக்டர் சர்மா வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது, போலீஸ் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சிங் தனது துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் ஹடேந்திர நாத் சிங் மீது சரமாரியாக சுட்டார். இதில், இன்ஸ்பெக்டர் சிங்கின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டரை ஒரு அறையில் வைத்து பூட்டினர். பின்னர், கூடுதல் போலீசார் விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் சிங்கை கைது செய்தனர். இன்பெக்டர் ஹடேந்திர நாத் தனது சொந்த வேலைக்காக சப்-இன்ஸ்பெக்டர் சிங்கை பயன்படுத்தியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த சிங் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!