Skip to content
Home » சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

தஞ்சாவூர் அருகேயுள்ள 17 வயது சிறுமி நகர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சை பிடிக்க முடியாமல் போய்விட்டது. இதையடுத்து, கீழ வஸ்தா சாவடியை சேர்ந்த உறவினரான கார் மெக்கானிக் அக்பர் அலி (39) என்பவருடன் பைக்கில் அந்த சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கு செல்லும் போது பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக பைக்கை நிறுத்திய அக்பர் அலி அச்சிறுமியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் வேறு பாதையில் சிறுமியை அழைத்துச் சென்று காரில் 7 மணிநேரம் வைத்து அக்பர் அலி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மாலையில் வீட்டுக்குத் திரும்பிய அச்சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்பர் அலியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து அக்பர் அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!