கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சொத்து பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக பாலகிருஷ்ணன் (66) என்பவரை அவரது அண்ணி பொன்னாம்மாள் சப்பாத்திக் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள பொன்னாம்மாளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:தமிழகம்