கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி ஹபிப் நகரை சேர்ந்த முகமது சுல்தான்- குர்ஷிதா பானு தம்பதியின் மகன் முகமது அக்கிஸ் அதில். 16 வயதான இவர் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று மாலை பொன்னா கவுண்டனூர் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இவர்கள் விளையாடிய பந்து அருகில் உள்ள ஒரு புதருக்கு சென்றது. அந்த பந்தை எடுக்கச் சென்ற முகமது அக்கிஸ் அதில்-ஐ பாம்பு கடித்தது.
உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்கிஸ் அதில் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
