பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் ஆற்றொணாத் துயரையும் அளிப்பதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “பண்டை இலக்கிய விற்பன்னரான அவர், மதுரை மணக்கும் எளிய நகைச்சுவைத் தமிழால் பட்டிமன்றங்களைத் தமிழர்களின் அன்றாட வாழ்வியலோடு இணைத்தவர். தற்கால மதுரையின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது; தமிழ்த்தாய் தன் அரும் புதல்வரை இழந்துவிட்டாள்” எனக் குறிப்பிட்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
