பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். Arrears வைத்துள்ள மாணவர்கள் ஏப்ரல் அக்டோபரில் நடக்கும் பருவ தேர்வுகளின் போது தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு. தேர்வு குறித்த விவரங்களை dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
