Skip to content
Home » ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த பயணிகளுக்கு உணவு…… ஹெலிகாப்டர் மூலம் வழங்கல்…

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த பயணிகளுக்கு உணவு…… ஹெலிகாப்டர் மூலம் வழங்கல்…

  • by Senthil

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சுமார் 500 பயணிகள் வெள்ளத்தில் சிக்கி3 நாளாக தவித்தனர்.  அவர்களில் 250 பேரை அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர். இன்று  காலை  8.50 மணியளவில் இன்ஸ்பெக்டர், ஆர்பிஎஃப்  ஊழியர்கள் மற்றும் 2 வணிக ஊழியர்களுடன்  ஸ்ரீவைகுண்டம் நிலையத்தை அடைந்து பயணிகளுக்கு  உணவு பொட்டலங்கள், பிஸ்கட், குடிநீர் விநியோகிக்கப்பட்டது. சுமார் 10.15 மணி நேரத்தில் IAF-ல் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் உணவுப் பொருட்களை (ரொட்டி, அரிசி, ஊறுகாய், குளிர்பானம்) மற்றும் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில்களை இறக்கிவிட்டு, RPF மற்றும் வணிக ஊழியர்களால் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

காலை 11.30 மணி அளவில்  3வது ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள்  ெசன்று ரயிலில் உள்ள பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள், பிரட்,  குடிநீர் ஆகியவகைளை வழங்கினர். அவற்றை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளுக்கு வினியோகம் செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!