Skip to content
Home » ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதிப்பார். தைதேர் உற்சவத்தின் 4ம் திருநாளான இன்று நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக மாம்பழச்சாலை அருகில் உள்ள வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக வீதிஉலாவந்து பின்னர் வாகனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பொதுவாக பெருமாள் ஆலயங்களில் கருட சேவை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது அந்த வகையில்

தை திருவிழா நான்காம் நாளான இன்று நடைபெற்ற கருட சேவையை வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர் – மாலை நேரத்தில் நம்பெருமாள் திருவீதி உலாவின் போது குதிரைகள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ம்திருநாளான வருகிற 03ம்தேதி காலை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!