ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்க ஆண் நபர் அவ்வழியே சென்றபோது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த நபர் வெள்ளை நிற வேஷ்டி மட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் அட் இன்ஸ்பெக்டர் அபிராமி விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவரைப் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

