ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்ய பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார். சென்னையிலிருந்து நாளை காலை திருச்சி விமானநிலையம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் அவர் சாமிதரிசனம் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வருவதையொட்டி இன்று காலை முதல் நாளை மதியம் வரை கோவிலை சுற்றியுள்ள கடைகள் அனைத்தையும் மூடுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசிக்க இன்று மாலை 6 மணி முதல் நாளை மதியம் 2.30 மணி வரை பொது சேவை இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் ரெங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி குறிப்பிட்ட சில இடங்களில் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கொடி மரம் பகுதியில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ள பகுதிகளில் பூ அலங்காரம் பூ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.